Monday, June 28, 2021

இலங்கை அணியின் 3 வீரர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனை


 இலங்கை அணியின் 3 வீரர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனை!

இங்கிலாந்து கிரிக்கெட் சுற்றுப் பயணத்திற்கு சென்றுள்ள சந்தர்ப்பத்தில் நேற்று (27) இரவு டராம் நகரில் சுற்றித்திரிந்ததாக குற்றம் சுமத்தப்பட்ட மூன்று வீரர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தீர்மானித்துள்ளது.
அதனடிப்படையில் தனுஷ்க குணதிலக, குசல் மென்டிஸ் மற்றும் நிரோஷன் திக்வெல்ல ஆகிய மூன்று வீரர்களுக்கும் எதிராக தற்காலிக போட்டித்தடை விதித்து அவர்களை மீண்டும் நாட்டிற்கு அழைப்பதற்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தீர்மானித்துள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் நிறைவடையும் வரையில் இந்த தற்காலிக தடை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment

களனி கங்கையில் மிதந்து வந்த சடலம் தொடர்பாக 3வர் கைது

சனிக்கிழமை (26) நவகமுவாவில் உள்ள களனி ஆற்றில் மிதந்து கிடந்த ஆணின் சடலம் தொடர்பாக ஒரு பெண் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  கைகளால் சங...