Monday, June 28, 2021

தேசத்திற்கான தெளிவுரை

நாட்டின் அபிவிருத்திக்கு, உட்கட்டமைப்பு வசதிகள் இன்றியமையாதவை என்பதை எவரும் அறிவர்.

வீடமைப்பு, வீதிகள் மட்டுமன்றி, அனைத்து வகையிலும் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்திச் செய்வதற்கு, எமது அரசாங்கம் கடந்த காலத்தில் அதிக கவனம் செலுத்தி வந்திருக்கிறது.

2021ஆம் ஆண்டில் 14,000 கிராமிய குளங்களைப் புனரமைப்பதற்கும் 10 ஆயிரம் பாலங்களை நிர்மாணிப்பதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு, அவற்றில் பெரும்பாலானவற்றின் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

நாடளாவிய ரீதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விளையாட்டு மைதானங்கள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன.

கிராமிய வைத்தியசாலைகள் புனரமைக்கப்பட்டு வருகின்றன.

‘100 நகரங்கள்’ திட்டத்தின் கீழ் - சிறிய, நடுத்தர அளவிலான 100 நகரங்களின் அபிவிருத்திப் பணிகள், இவ்வருட இறுதிக்குள் நிறைவடையும்.

நகரங்களை அழகுபடுத்தும் நிகழ்ச்சித்திட்டங்கள் அனைத்தையும் பசுமைத் திட்டமாக நடைமுறைப்படுத்துவதற்கு, நாம் கொள்கை சார்ந்த தீர்மானத்தை எடுத்துள்ளோம்.

அனைத்து முக்கிய, உப நகரங்களிலும், நகரப் பூங்காக்கள் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளன.

சட்டவிரோத நிர்மாணங்கள் மற்றும் கழிவகற்றல் பிரச்சினைகளுக்கு உள்ளாகி, அண்மையில் பாரிய சமூகக் கலந்துரையாடலுக்கு உட்பட்ட முத்துராஜவெல ஈரநிலத்தை அரசாங்கம் பொறுப்பேற்று, அதனை ரெம்ஸா ஈரநிலமாகப் பாதுகாப்பதற்கு, அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது.
 
தொழில்நுட்பத்தின் அடிப்படையிலான ஒரு சமூகத்தை உருவாக்குவதற்கு உதவியாக, காலி, குருநாகல், நுவரெலியா, கண்டி மற்றும் தம்புளை நகரங்களில், தொழில்நுட்பப் பூங்காக்கள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன.

Source 
ஜனாதிபதி கோட்டாபயராஜபக்‌ஷ முக நூல் பக்கத்தில் இருந்து 

No comments:

Post a Comment

களனி கங்கையில் மிதந்து வந்த சடலம் தொடர்பாக 3வர் கைது

சனிக்கிழமை (26) நவகமுவாவில் உள்ள களனி ஆற்றில் மிதந்து கிடந்த ஆணின் சடலம் தொடர்பாக ஒரு பெண் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  கைகளால் சங...